Wednesday, 23 March 2016

SRI LAKSHMI NRUSIMHA RUNA VIMOCHANA STHOTHRAM in tamil

ஶ்ரீலக்‌ஷமீ ந்ருஸிம்ஹ ருண விமோசன ஸ்தோத்திரம்
ஶ்ரீபிரஹளாத ஆழ்வாருக்காக பூரிப்போடு உவகையுடன் விரைந்து அவதரித்து அருளி அவரை காத்தது போல, ஶ்ரீ லக்‌ஷமீந்ருசிம்ஹர் ஸ்தோத்திரங்களை படிப்பதனால் எம்பெருமான் அனைவரையும் காத்து அருள்வார்.  மிக மிக புராதனமான கோவில்களில் ஶ்ரீலட்க்‌ஷ்மீந்ருரஸிம்ஹரை ப்ரதிஷ்டை செய்துள்ளார்கள்.  ஶ்ரீரங்கத்தில் காட்டழகிய சிங்கர், கீழ்த்திருப்பதியில் தேர்வான் குளத்தருகில் ஶ்ரீலக்‌ஷமீந்ருசிம்ஹர் சந்நிதி, திருக்கொட்டியூர் திருவாலி, திருநகரி, நரசிங்கபுரம், பரிக்கல், பூவரச்ங்குப்பம், அபிஷேகபாக்கம், சோளிங்கர் கோவில்கள் விசேஷமானவை.  அவன் சர்வ ரக்‌ஷகர். ஶ்ரீ நரசிம்மமின்றி காப்பவர் எவருமில்லை.  ஶ்ரீ நரசிம்மர் சந்நிதியில் உள்ள விளக்க்ல் நெய் செலுத்தி நம்பிக்கையுடனும் பக்தியுடனும், தப்பில்லமல் பிழையில்லமல் ஸ்லோகங்களை கூறி பிரார்த்தனை செய்தால் நல்வழி கிடைப்பது திண்ணம்.

தேவதா - கார்ய ஸித்யர்தம் ஸபா - ஸ்தம்ப ஸமுத்பவம் 
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ரிண முக்தயே

தேவகாரியங்கள் பூரணத்துவமடைய சபா மண்டபத் தோணிலே தோன்றியவரே! ஶ்ரீ ந்ருசிம்ஹ மஹவீரரே! என் கடன்களிலிருந்து என்னை விடுவிக்குமாறு வேண்டிக் கொண்டு நமஸ்காரம் செய்கிரேன்.

                லக்‌ஷ்ம்யா - லிங்கித வாமாங்கம் பக்தானாம் வர தாயகம்
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ரிண முக்தயே

ஶ்ரீ மஹாலக்‌ஷமியால் இடதுபக்கம் அங்கம் தழுவ பெற்றவனே! பக்தர் கேட்கும் வரங்களை தருபவரே! என் கடன்களிலிருந்து என்னை விடுவிக்குமாறு வேண்டிக்கொண்டு நமச்காரம் செய்கிறேன்!

அந்தர – மாலா - தரம், சங்க சக்ராப்ஜா - யுத தாரிணம் 
        ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ரிண முக்தயே

நரம்பு மாலை அணிந்தவரே!  சங்கு, சக்கரம், தாமரை, ஆயுதம் அணிந்தவரே! ஶ்ரீ ந்ருசிம்ஹவிரரே! என் கடன்களிலிருந்து என்னை விடுவிக்குமாறு வேண்டிக்கொண்டு நமச்காரம் செய்கிறேன்!

ஸ்மரணாத் ஸர்வ பாப்க்னம் கத்ருஜ விஷ நாசனம்
ஶ்ரீ   ந்ருசிம்ஹம் மஹா வீரம் நமாமி ரிண முக்தயே

நினைத்தவுடனே எல்லா பாபங்கனையும் நீக்குபவரே! சத்ரு புத்திரர்களான நாகங்களால் வரும் விஷ ஆபத்தை விலக்குபவரே ஶ்ரீ ந்ருஸிம்ஹ மஹாவீரரே, கடன் கஷ்டத்திலிருந்து விடுபட உம்மை சரணமடைகிறேன்!

சிம்ஹ நாதேன மஹதா திக் தந்தி பய நாசனம்
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ரிண முக்தயே

சிம்மத்தின் கர்ஜனை யானைகளை நடுங்க செய்யும்! பயங்களை கர்ஜனையால் போக்குபவரே ஶ்ரீ ந்ருசிம்ஹம்.  ஆகப்பட்டவரே கடனிலிருந்து பூரண முக்தியளிக்க உம்மை நமஸ்க்கரிக்கிறேன்.

ப்ரஹ்ளாத வரதம் ஶ்ரீஸம் தைத்யேச்வர விதாரிணம்
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ரிண முக்தயே

ப்ரஹ்ளாதனுக்கு வரம் தந்தவரே லக்‌ஷமீபதியே! அசுரவேந்தனான இரணியகசுபுவின் மார்பினை கிழித்தவரே! மஹாவீர ஶ்ரீ ந்ருஸிம்ஹரே! க்‌ஷணமும் நிம்மதி தராத கடனிலிருந்து எம்மை காப்பீராக ! உமக்கு நமஸ்காரம்


க்ரூர க்ரஹை:  பீடிதானாம் பக்தானாம் அபய ப்ரதம்
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ரிண முக்தயே

குரூரமான நவக்ருஹ பார்வையாலே கஷ்டமுறும் உம் பக்தர்களுக்கு அபயப்ரதானம் நல்குபவரே! ஶ்ரீ ந்ருசிம்ஹ மஹாவீரரே! என் கடன்களிலுருந்து என்னை விடுவிக்குமாறு வேண்டிக் கொண்டு நமஸ்காரம் செய்கிரேன்.

வேத வேதாந்த யக்ஞேசம் ப்ரம்ம ருத்ராதி வந்திதம்
ஶ்ரீ   ந்ருசிம்ஹம் மஹா வீரம் நமாமி ரிண முக்தயே

வேதங்கள், உபநிஷத்துக்கள், யக்ஞங்கள் இவற்றின் சர்வ ஈச்வரனே….. ப்ரஹம, ருத்திர தேவர்களால் நமஸ்கரிக்கப்பட்டவரே! கடனெனும் நிம்மதி நாஸத்தினறு விடுபட உம்மை நமச்க்கரிக்கின்றேன் ஶ்ரீ மஹாவீரரே!
இதம் படதே நித்யம் ரிண மோசன ஸம்ஜ்ஞிதம்
அந்ரிணீ ஜாயதே சத்யோ தனம் சீக்ரம் அவாப்னுயாத்

ருணவிமோசனம் எனும் இந்த ச்தோத்திரத்தை தினமும் உள்ளமுருகி பக்தியுடனே படிப்பவருக்கு எவ்வள்வு பெரிய கடனும் சோரியனை கண்ட பனியென ஓடிவிடும்.


No comments:

Post a Comment