Wednesday, 2 March 2016

கதாம்ருதம்

    SWAMIYE SARANAM AYYAPPA !                                                                                               
Poojyashri S.  Seshadri Iyer is my first Guruswamy. He is my father too.  I had been to Sabarihills in 1956 for the first time.  He gave so many advices.  I gathered many advices from many Gurujis. So many people will be having many doubts about sabarimala vrutham, etc. I would like to clear your maximum doubts to my maximum possible level. With Ayyappan's blessings I will try to do this task. 
I have also written a Tamil book named “Samathwa Saastha” and published by Giri Trading which is available at all their outlets.  The same only is given in the Ayyappan Story and a Song (Tamil) in the website. Not only that I have given my writings recently in a Blog named www.maniseshadri.com and my mail address is vrmnseshadri@yahoo.co.in    My mobile number is 74116 68008. I request all the beloved people to go through that thoroughly and send me your valued comments.
As told earlier I am giving below the Song Ayyappan song story titled as “Kadhamrutham”.  Our late famous singer M.S. Subbalakshmi has sung full Ramayanam in one song titled as “Nama Ramayanam” and this is available in CDs and all telecasting channels.  That song only is the inspiration for me to write Kadhamrutham.  Any interested valued singers may please sing this song and publish in a CD.  Singers/others may please try this in other languages also.  Before publishing the CD the concerned may please contact me over phone and I request that my name with photo appears in the CD. Otherwise this may lead to legal proceedings.

Ayyappadasan S. Veeramani Iyer

                                                                                                      

          

                 ஓம்
ஓம்        விக்ன  விநாயகாய    நம:
ஓம்        சுப்ரம்மண்யாய    நம:
ஓம்        ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

 ஶ்ரீ ஐயப்ப
                     கதாம்ருதம்



                                       
   எழுதியவர்:
  சமத்துவ சாஸ்தா நூலாசிரியர் ஐயப்பதாஸன் எஸ். வீரமணி ஐயர்          
  அடூர், கேரளம்  (தொலைபேசி:  0 7411668008  /  08025220971             
                                                          email: vrmnseshadri@yahoo.co.in)
                                                          blog: maniseshadri.blogspot.com
விலாசம்  206 சரோஜ் ரீஜன்ஸி, முதல் குறுக்குத் தெரு,
          எம். எஸ். ரெட்டி நகர், மாறத்தஹள்ளி
                     பங்களூரு  560 037, கற்ணாடகா மானிலம்

      ஓம் ஸ்வாமியே  சரணம்   ஐயப்பா!                                                    ஓம் ஸமஸ்தாபராத ரக்‌ஷகனே  சரணம் ஐய்யப்ப

தேஜோ   மண்டல   மத்யகம்
          த்ரிநயனம்   திவ்யாம்பராலம்க்ருதம் 

தேவம்   புஷ்பசரேஷு   கார்முகலஸன்
           மாணிக்ய   பாத்ராபயம்

பிப்ராணாம்   கரபங்கஜைர்
           மதகஜ   ஸ்கந்தாதி   ரூடம்   விபும்

சாஸ்தாரம்   இஷ்டவரதம்   சரணம்   பஜாமி    ஸததம்   
           த்ரைலொக்ய   ஸம்மோஹனம்
                             

சரணம்   சரணம்   ஐயப்பா                      -                       சரணாகதனே   ஐயப்பா
சன்மார்கதாயகனே   ஐயப்பா                -                       ஶ்ரீதர்மசாஸ்தா    ஐயப்பா                                                                           (சரணம்…………..)  
ஐயப்பன்   கதையை    பாடுகிறேன்
யாவரும்    ஆனந்தமாக   கேள்ப்பீரே   -     அவர்
அருமை   பெருமை   எல்லாமெ
அழகாய்   நானும்   பாடுகிறேன்           (சரணம்…………..)

   1       அன்றொரு   நாள்   த்ரிமூர்த்தி   தேவியர்
            ஸத்தியலோகத்தில்   கூடினரே
திருச்சபை   ஒன்றை   அமைத்த   அவர்கள்
            ஒருங்கே   முடிவும்   எடுத்தனரே

  2        கடைசியில்   அவயை   முடிக்கவேண்டி
            நாட்டியம்   ஒன்றை   விரும்பினரே
            வித்யாதரை   என்றொரு   மங்கையுமே
            நாட்டியம்   ஆடி   அலங்கரித்தாள்

  3        நாட்டியக்களிப்பில்   பரவசமடைந்த
            தேவியர்   அவளுக்கு   பூமாலை   அளித்தார்
            மாலையை   பெற்ற   மங்கையுமே
            அவரிடம்   ஆசியை   பெற்றாராம்
  
 4         வழியினில்   வந்த   துர்வாஸ  முனிவர்
            மாலையை   அவளிடம்   பெற்றுக்கொண்டார்
            மாலையை   எடுத்த   துர்வாஸருமே
            அமராவதி   நோக்கிச்   சென்றாரே

  5         அப்பொழது தான்  தேவேந்திரனும்
             தேவர்கள்   புடைசூழ   பவனி  வந்தார்
             ரிஷியும் உடனே   பூமாலை   எடுத்து
             தேவேந்திரனுக்கு   அளித்தாராம்

  6         மமதைகொண்ட   தேவேந்திரனும்  -  அதை   
             யானையின்   தலையினில்   வைத்தானாம்
             வண்டுகள்   பூவின்   தேனை   எடுக்க
             பூவின்   அருககே   மொய்த்தனவாம்

  7         தேனை   எடுத்த   வண்டுகளும்   டையில்
             யனையின்   தலையிலும்   கொட்டியதாம்
             வலியைத்   தாங்கா   கஜேந்திரனும்
             மாலையை   கீழிட்டு   சவிட்டியதாம்

  8         அதனைக்கண்ட   முனிவருமே
             கோபம்   மேலிட   சபித்தாராம்
             ஐஸ்வர்யமிழந்த   தேவர்களுமே
             துன்பப்பட்டு   முனிவரை   வேன்டினாராம்

  9         அதற்க்கு   சாபவிமோசனம்   தரும்படி
              மன்ற்றாடி   முனிவரை   கேட்டுக்கொண்டார்
              பாற்க்கடல்   அமிர்தம்   உண்டாலே
              ஐஸ்வர்யம்   வருமென   விடைபெற்றாராம்

 10         தேவாசுரர்கள்   பாற்க்கடல்   கடைந்த்தில்
              பலப்பல   அதிசயம்   நேர்ந்ததுவாம்
              அமிர்தம்   வந்ததும்   அசுரர்தானும்
              அதனை   கவர்ந்து   ஓடினார்கள்
  
 11         விஷ்ணுவும்   மோஹினி   அவதாரம்   எடுத்து
              அமிர்தத்தை   தேவனர்க்கு   பகிர்ந்தாரே
              இந்திரப்  பதவியை  இழந்த   தேவேந்திரனும்
              வேறொரு   தொல்லைக்கு   ஆளானார்

 12         ஹரியும்   எடுத்த   மோஹினிரூபத்தில்
              ஹரனோ   மிகுந்த   மய்யலுற்றார்
              ஹரியும்   ஹரனும்   இணைந்ததினால்
              சாஸ்தா   பிறந்து   வளர்ந்து   வந்தார் –  
  தர்ம சாஸ்தா   பிறந்து   வளர்ந்து   வந்தார்
(சரணம்…………..) 
 13         சாஸ்தா   பிறந்ததும்  ஸரஸ்வதிபிரமனுமே
              களிப்புடன்   அவரை   எடுத்துச்சென்றார்
              கலைகள்   யாவும்   கற்று   உணர்ந்து
               உப   சேனாதிபதியாய்   ஆகிவிட்டார்

 14         குறித்த  காலத்தில்   சாஸ்தாவும்
              புஷ்கலாவை   மணம்   புரிந்தார்
              ஸத்யகன்   என்றொரு   பாலனும்   தான்
              சாஸ்தாவுக்கு   பிறந்தானே

 15         பின்பு   பளிங்கு   நாட்டு   ராஜகுமாரி
              பூர்ணாவையுமே   மணந்துக்   கொண்டார்
              ஏமாற்றி   திருமணம்   செய்ததினால்
              சாஸ்தாவை   மன்னன்   சபித்து விட்டான்

 16         அப்படியிருக்கும்   வேளையிலே
              மஹிஷாசுரன்   தங்கை   தவம்   இருந்தாள்
              பிரமனும்   தவத்தில்   மனமகிழ்ந்து
              வரங்களை   அள்ளி   கொடுத்து   விட்டார்

 17         அவளால்   கேட்ட   வரங்களிலே   –   பிரமன்
              ஒருவரம்   மட்டும்   கொடுக்கவில்லை
              அதனால்   வருந்திய   மஹிஷியுமே  -  அந்த
              வரத்தினை   பெறுவதில் சிந்திக்கலானாள்
  
 18         ஹரிஹரன்   மகனால்தான்   தன்முடிவெனவே
              வரத்தினை   மாற்றி   பெற்றுக்கொண்டார்
              பிரமன்   கொடுத்த   வரங்களினால்   –   மஹிஷி
              மூவுலகையும்   வென்று   ஆட்க்கொண்டாள்

 19         முற்பிற்வியிலே   பந்தள   மன்னனும்
              சாஸ்தாவை   வேண்டி    தவமிருந்தார்
              சாஸ்தாமவும் தான் மனமகிழ்ந்து   வருக்கு      
              தான்  மகனாக   வளரும்   வரம்   கொடுத்தார்

 20         மஹிஷியின்   வரங்களும்   சாஸ்தாவின்   வரமும்
              பளிங்கு   மன்னனின்   சாபமும்   சேர்ந்து
              உறுதுணையாக   இருந்ததினால்
              மனிதனாகப்   தோன்ற   முடிவெடுத்தார்  –   பூமியில்
 மனிதனாகப்   தோன்ற   முடிவெடுத்தார்

 21         உத்திர   நக்ஷத்திரம்   சனிவாரம்   கூடிய
              சுபதனத்தில்   சாஸ்தாவும்   பிறப்பெடுத்தார்
              கண்டத்தில்   மணியுடன்   குழந்தை   உருவத்தில்
              பம்பைக்   கரையினில்   காட்சியளித்தார்
                                                  குழைந்தயாக காட்சியளித்தார்

 22         பந்தள   மன்னனும்   வேட்டைக்காக
              அவ்விடம்   வந்து   சேர்ந்தானே
              மக்கட்ப்பேறு   இல்லாத   மன்னனும்
              அக்   குழந்தையை   எடுக்க   சென்றானாம்

 23          அப்பொழுது   அங்கு   அசரீரி   வந்ததால்
               குழந்தையை   மன்னனும்   எடுத்தானாம்
               மஹரிஷி   உருவத்தில்   தோன்றின  சிவனும்
               அக் குழன்தைக்கு மணிகண்டனென்று   பெயர்   வைத்தாராம்
               குழந்தைக்கு   மணிகண்டனென்று   பெயர்   வைத்தாராம்

 24          குழந்தை   இல்லா   பந்தள   ராணியும்
               அக்   குழந்தையை   எடுத்து   உச்சி   முகர்ந்தார்
               அதி   சுந்தரனான   குழந்தை   மேலும்
               மிக   புத்திசாலியாக   வளர்ந்ததுவாம்                       (சரணம்…………..) 

 25             இளம்   வயதிலேயே   குழந்தை   மணிக்கு                   
                  உபநயனமும்    நடத்தினரே
                  ராஜாவும்   ராணியும்   மணிகண்டனிடத்தில்
                  அபார   ஆசை   வைத்துவந்தார்

 26             சரியான   வயதில்   கல்வி   கற்க்கவே
                  மணியை   குருகுலம்   அனுப்பினரே
                  குருகுலம்   படித்த   மணிகண்டனும்
                  குருவின்   முதல்மை   சிஷ்யனானான்

 27             குருவின்   புதல்வனின்   முடியாமை   உணர்ந்து
                 அவனுக்கு   பிறவி   ஊனதை   தீர்த்தாரே
                  குருவும்   தான்   மணிகண்டனின்   –   இந்த
                  தெய்வாதிசயத்தைக்   கண்டு   வியந்தாரே

 28             குருவை   மட்டும்   தனியாக   அழைத்து
                  தன்   பிறவி   ரஹஸியத்தை   தெரிவித்தார்
                  தீக்ஷை   முடிந்த   மணிகண்டனை   –   குருவும்
                  பந்தள   நாட்டுக்கு   அனுப்பிவைத்தார்

 29             பந்தளமடைந்த   மணிகண்டனிடத்தில்
                  மந்திரி   பொறாமை   கொண்டார்
                  கொடிய   விஷம்   கலர்ந்த   உணவைத்தானே
                  மணிகண்டனுக்கு   கொடுக்கச்   சொன்னார்

 30             நஞ்சு   கலர்ந்த   உணவினைத்தான்
                  மணிகண்டன்   உட்க்கொன்டு   உறஙிகிவிட்டார்
                  விஷத்தின்   வீரியம்   வலுத்திடவே
                  மணிகண்டன்   நிறமும்   மங்கியதாம்

 31             மணிகண்டன்   நிலைமை   சீர்கெடவே
                  அரண்மனை   வைத்தியர்   சோதித்தார்
                   பரவிய   விஷத்தின்   தன்மையிலே
                   நிலைமை   மோசமென   கூறிவிட்டார்
  
 32              இதைக்   கேட்ட   மன்னன்   கவலைமேலிட
                   பரமனை   வேண்டிலலட   சென்றாரே
                   சிவனும்   தவயோகி   வேடமெடுத்து
                   மணிகண்டனை காப்பற்றி   மறைந்தாரே

 33             அடுத்துள்ள   ஊரில்   திருநாளை   –   மணிகண்டனும்
                   கண்டுகளிக்க   ஆசைப்பட்டார்
                   பொறாமை   மேலிட்ட   மந்திரியும்
                   மணிகண்டனை   உடன்   அனுப்பிவைதார்

 34              சதிக்கூட்டம்   ஒன்றை   உருவாக்கிய மந்திரி
                   மணிகண்டனை  அழிக்க  ஆணையிட்டார்
                   ஆனால்  மணிகண்டனருகே   வந்த   யானையும்
                    பூமாலை   போட்டு   பூஜை   செய்யத்தாம்

 35               பலவித   சதிகள்  செய்தாலும்
                    மணிகண்டன்   எதிலும்   மரிக்கவில்லை
                    இதநாலேயே   மனமுடைந்த
                    மந்திரி   தருணம்   பார்த்து   வந்தார்

 36               அப்படி   சில   மாதம்   கடக்கயிலே
                    மஹாராணி   மகவை   பெற்றெடுத்தாள்
                    அப்படி   எல்லோரும்   மகிழ்ச்சியிலேஅக்
                    குழைந்தைக்கு   ராஜராஜன்    என   பெயர்   வைத்தார்        (சரணம்…………..)

 37                பந்தள   நாட்டில்   கொள்ளை   வலுக்கவே
                    வழிப்போக்கர்   யாவும்   அஞ்சினரே
                    காரணம்   தேடிச்சென்ற   மணிகண்டனை
                    கொள்ளையர்   ஒன்றுகூடி   பிடிகூடினராம்

 38               இடக்  காட்டில்   வாவர்   என்ற   தலைவன்
                    அழகாய்   நடுவில்   வீற்றிருந்நான்  -  மணியின்
                    பிறவி   உண்மையை   அறிந்த   வாவரும்
                    மணிகண்டன்   முன்னால்   வணங்கி   நின்றார்
  
 39               அதன்பின்பு   மணிகண்டன்   நன்பராகி    -    வாவர்
                    எருமேலி    சென்று   வாழ்ந்து   வந்தார்
                    எருமேலி   வாவர்   என்றாலே
                    அனைவரும்   நன்றாய்   அறிவீர்கள்

 40               வாவரை   நன்றாய்   பணிய   வைத்து
          தனக்கு   ஒப்பான   பதவி   கொடுத்தாராம்
                    ஹிந்து   முஸ்லீம்   ஒற்றுமையை
                    இந்தக்   கதையில்   நன்றாய்   காண்பீரே

 41               பந்தள   நாட்டின்   வளர்ச்சிக்காக
                    மணிகண்டன்   மிகவும்   பாடுபட்டார்
                    மந்திரி   சுமத்திய   வரிகளை   யாவும்
                    மணியும் பலவாறாக   அகற்றிவிட்டார்

 42               இச்செயல்   கண்ட   மந்திரியாரின்
                    துர்ச்   செயல்   சூது   தலை   தூக்கியது
                    அந்னேரம்  வேறொரு   கொள்ளை   கூட்டமது
                    வழிப்பொக்கர்களை   சீண்டியதாம்

 43               ஸாத்வீக   முறைப்படி   வாழ்ந்துவந்த
                    வாவர்   தன்னையே   அழைத்தாராம்
                    துஷ்டரை   அழிப்பதில்   தவறேயில்லை   என
                    நற்புத்தி   கூறி   அழைத்துச்   சென்றார்

 44              உதயனன்   என்றொரு   கொள்ளைக்காரன்
                    காட்டினில்   கொள்ளை   அடித்தானாம்
                    அவன்   தம்பியர்   இருவரை   கொன்ற   வாவரும்
                    மணிகண்டன்   முன்னால்   வந்தாரே

 45                திருந்திய   மனம்   கொண்ட   உதயனனுமே
                     மணிகண்டனுக்கு   கீழ்ப்படிந்தான்
                    அவனை நன்றாய்   உபதேசித்து
                     கோட்டைப்படிக்கு   அனுப்பிவைத்தார்
  
 46               வெற்றிக்களிப்படைந்த   மணிகண்டனுக்கு
                    ராணியும்   பொன்வாளை   அளித்தாரே
                    அந்த   வாள்   தான்   இன்நாளிலுமே
                    எருமேலி   காட்டில்   இருக்கிறதாம்

 47               பந்தள   நாட்டு   சங்கர   சாஸ்திரி   என்பவர்
                    ராஜசபையில்   வீற்றிருந்தார்
                    தலைக்   கனம்   ஏறிய   சாஸ்த்திரி   ஆகிலும்
                    ஏழையை   எப்போதும்   காப்பற்றுவார்

 48              அவர்   எப்பொதும்   பட்டுத்   துணி   அணிவதால்
                    பட்டுசாஸ்த்திரி   என்றே   அறியப்பட்டார்
                    எப்படிப்பட்ட   சாஸ்திரியாகிலும்
                    மணிகண்டனிடத்தில்   மட்டும்  பக்தி   வைத்தார்                 (சரணம்…………..) 

 49               பக்தியை   அறிந்த   மணிகண்டனும்
                    அவரிடம்   ஜன்ம   ரஹஸியம்   கூறினாராம்
                    தனது   ஜன்மம்  உடனடி  முடிந்து
                    மணிகண்டனில்க்   கலக்க   ஆசைப்பட்டார்

 50               தலைக்கனம்   மிகுந்த   காரணத்தால்
                    மறுபறவி   ஒன்றை   எடுப்பாய்   என்றார்
                    கம்ப்ங்குடி   கிராமத்தில்   ஏழை  கவியாகப்   பிறந்து
                    தனக்கு  ஊறக்க தாலாட்டு   பாடு   பாடச் சொன்னார்
                              ஹரிவராஸனம்   எழுதச்சொன்னார்

 51               அப்படியிருக்கும்   வேளையிலே
                    மந்திரியின்   சதியும்   வேலை   செய்த்தாம்
                    மந்திரியின்   வேண்டுகோளுக்கிசைந்த      ராணியும்
                    வயிற்று   வலி   என்று   நடித்தாராம்

 52               அது   ஒரு   மற்ம   நாடகமென்று
                    அப்பொது    யாருக்கும்   தெரியவில்லை
                    அதனால்   துடிதுடித்த   மன்னனுமே
                    வைத்தியர்   யாவரையும்   வரவழைத்தார்
  
 53               மந்திரி   கட்டளைக்கு   அடிபணிந்த   வைத்தியர்
                    புலிப்பால்   வேண்டுமென   கேட்டுக்கொண்டார்
                    புலிவேட்டைக்கென்று   புறப்பட்ட   மன்னனையும்
                    மந்திரி   மிகவாக   தடை   செய்தார்

 54               விஷயம்   அறிந்த   மணிகண்டனும்
                    புலிப்பால்   கொண்டுவர   புறப்பாட்டார்
                    அதனை   எதிர்பாராத   மந்திரியுமே
                    மணிகண்டனை   ஊக்குவித்து   அனுப்பிவைத்தார்

 55               பலமலை   கடந்த   மணிகண்டனும்  தான்
                    மஹிஷியை   எதிர்   நோக்கி   புறப்பட்டார்
                    சொர்க்கத்தில்   மஹிஷீ   ஆர்ப்பாட்டமென்று
                    ஞானதிருஷ்டியில்   அறிந்துக்   கொண்டார்

 56               மணிகண்டனைப்   பார்த்த   மஹிஷியுமே
                    ஏதோ   சிறுபாலனென்று   கருதிவிட்டாள்
                    பாலனானாலும்   போர்   செய்வேனென்று  -  அவர்
                    வில்லின்   நாணை   முழங்கச்   செய்தார்

 57               ஹரிஹரஸுதனென்று   தெரியாமல்      மஹிஷி
                    சிறுபிள்ளைத்   தனமாக   போரிட்டாள்
                    மணிகண்டனின்   வீரமும்   பெருகிவர
                    அவளும்   மாயமாகி   போரிட்டாள்

 58               அவள்   நிராயுதபாணியாய்   போரிட்டதால்
                    மணிகண்டனும்   ஆயுதத்தை   விட்டகன்றார்
                    மாயவேகமாக   ஒளிந்த   மஹிஷீ
                    உடனே   மல்யுத்தம்   செய்தாளாம்

 59               தாங்க   முடியா   மல்யுத்ததால்
                    மஹிஷியும்   கீழே    சாய்ந்துவிட்டாள்
                    பூமியில்   அழுதாமேட்டில்   ஏறிய   அவளும்
                    மணிகண்டனுடனே   போர்   செய்தாள்

 60            அவள்   கொம்பை   முறுக்கியதில்   பலவீனமடைந்து
                 தடுமாறி   மீண்டும்   வீழ்ந்துவிட்டாள்
                 மறுபடி   எழுந்த   மஹிஷியுமே
                 நன்றாய்   மல்யுத்தம்   செய்தாளாம்                                          (சரணம்…………..) 

 61            மஹிஷியின்   வதத்தை   பாற்கவேண்டி
                 பாற்வதி   சிவனும்   வந்தனரே
                 யுத்தம்   பலமணி   நேரமாகவே
                 நன்றாய்   பலமாய்   நடந்தனவாம்

 62            பெருமிதமடைந்த   பரமசிவனும்
                 நந்தியை   மரத்தில்   கட்டினரே
                 அந்தமரம்   தான்   காளகட்டி
                 அதை அனைவரும்   நன்றாய்   அறிவீரே

 63             தேவரும்   அதனை   பாற்கவேண்டி
                  வானத்தில்   பலவாய்   கூடினரே
                  அனைத்து   ரிஷிகளும்   மண்டலத்துடனே
                  வந்தாராம்   ஒருபக்க   வானத்தில்

 64             மாதவன்   பிரமன்   தேவியருடனே
                  வைகுண்டத்தில்   கூடினரே
                  உலகங்கள்   அனைத்தும்   எதிர்பார்த்திட்ட
                  மஹிஷீவதம்   நடந்தேறியதாம்

 65             மஹிஷியும்   கூரிய   கொம்புடனே
                  மணிகண்டனை   குத்தி   குதறினாளாம்
                  அதனை   சஹியா   மணிகண்டனும்
                  அவள்   கொம்பை   முறுக்கி   ஒடித்தாராம்

 66              வலியைத்தாங்கா   மஹிஷியுமே
                   ஒரு   பாறையின்   மேலே   விழுந்தாளாம்
                   உடனடியாக   மணிகண்டனும்
                   அம்பை   எய்து   அவள்  மாறை   பிளந்தாராம்
  
 67              மாறில்   தொடுத்த   அம்புடனே
                   மஹிஷியும்   உயிரை   நீத்தாளாம்
                   அதற்க்காகவே   காத்திருந்த  தேவர்கள்   
                   பூமாரி   பொழிந்து  களிப்படைன்தார்

 68              மாதவன்   பிரமன்   தேவியருடனே
                   பிரமனும்   சேர்ந்து   ஆசி   கூறினர்
                   தேவரிஷி   மண்டலம்   ஒன்றாகச்   சேர்ந்து
                   வேத   கோஷ்ங்கள்   முழக்கினாராம்

 69               மஹிஷியும்   உடலை   துறந்தவுடனே
                    லீலாவதியாக   மாறிவிட்டாள்
                    தானொரு   பெண்ணாய்   மாறியதால்
                    தன்னை   திருமணம்   புரிய   வேண்டிளாம்

 70               இந்த   ஜன்மத்தில்   பிரமச்சரியம்   மேற்க்கொண்ட
                    தன்னால்   அதற்க்கு   முடியாதென்றார்
                    லீலாவதியும்   அதனைக்   கேட்டு
                    கண்ணீர்க்   குளத்தில்   குளித்துவிட்டார்

 71               இன்னும்   கொஞ்ச   நாட்கள்   சென்று
                    பக்க்த்து   மலையில்   சபரிமலையில் அமரற்வேநென்றார்
                    லீலாவதிக்கு   முடியுமானால்   -   தன்
                    இடப்பக்கம்   கோவில்கொண்டு   அமரச்   சொன்னார்

 72               அப்படி   மஞ்ச   மாதாவாய்   உருக்கொண்டு
                    இன்நாளிலும்   நன்றாக   அறியப்பட்டார்
                    தன்னைத்   தேடி   கன்னிகள்   வராமட்டில்
                    மணம்   புரிவேநென்று   உறுதிசெய்தார்          (சரணம்…………..)
 
 73               கொடிய   மஹிஷீ   வதத்தை   முடித்ததும்
                    மணிகண்டன்   நீலிமலை   ஏறினரே
                    அப்படி   மணிகண்டன்  மேலே   செல்கையில்
                    பக்த   சபரீ   தபஸ்வி   வந்தார்
  
 74            அவருக்கு   உயர்ந்த    முக்தி   கொடுத்து
                 அவர்   பெயரை   அம்   மலைக்கு   வைத்துவிட்டார்
                 துஷ்டப்   புலிகள்   தென்படவே  -  தாயின்
                 வயிற்று   வலியும்   நினைவு   கொண்டாராம்

 75            மஹிஷீ    வதத்தால்   மனம்   குளிற்ன்த   
                 இந்திரனும்  தேவர்கள்   புடைசூழ   வந்தாரே
                 மணிகண்டனுக்கு   பெரும்   நன்றி   செலுத்தவே
                 தேவர்குலமே   ஆசைகொண்டதாம்

 76            தேவேந்திரனும்   பெண்புலியாய்   மாற
                 தேவரெல்லோரும்   பெண்புலியானார்கள்
                 மனம்   மகிழ்ந்த    மணிகண்டன்   தானும்
                 தேவேந்திரப்   புலிமீது   அமர்ந்துக்   கொண்டார்

 77            பந்தள   நாட்டில்   புலிகளை   பார்த்த
                 மக்கள்   பயந்து   பதறினாராம்
                 பந்தள   மன்னனும்   மந்திரியாருமே 
                 அந்த   புலிகளை   பார்து விரண்டார்கள்

 78            அதை   எதிர்பார்த்திராத   மந்திரியுமே
                 தன்   தப்பை   எண்ணி   வருந்தினானாம்
                 பந்தள   மன்னனும்   மந்திரியாருமே  -  மணிமுன்
                 மண்டியிட்டு   மன்னிப்பு   கோரினார்

 79            மணிகண்டன்   சொல்லை   கேட்ட   அடுத்தநிமிஷமே
                 புலிக்கூட்டம்   தானாக   மறைந்தனவாம்
                 அங்கிருந்த   மஹாராணியுமே
                 மணிகண்டனிடத்தில்   மன்னிப்பு   கேட்டார்

 80            அப்பொழுது   மணிகண்டன்   தானும்
                 பனிரெண்டு   வயதை   நெருங்கினாராம்
                 தன்   ஜன்ம   காரியம்   முடிந்ததென்று
                 மணிகண்டன்   மன்னனிடம்   தெரிவித்தான்
  
 81            தன்   உண்மையான   தாய்   தந்தை
                 யாரென்று   உள்ளதை   நன்ற்றாக தெரிவித்தார்
                 மஹிஷீ   வதத்தை   முடிக்கவேண்டி   
                 உலகுக்கு   வந்தேனென்பதை   தெரிவித்தார்

 82             கேரளத்தில்   சபரிமலையிலே
                  தான்   குடிகொள்ளவும்   முடிவெடுத்தார்
                 அம்   மலையில்   செவ்வனே   ஆலையமொன்றை
                 அமைக்க   வேண்டும்  என   கேட்டுக்   கொண்டார்

 83             குருமார்களை   எல்லாம்   அழைத்த   மணிகண்டன்
                  குருபூஜை   எல்லாம்   செய்தாராம்
                  பூர்ணிமா   என்ற   நன்னாளில்
                  குருவின்   திருனாளும்   நடந்த்தேறியதாம்                              (சரணம்…………..)

 84             பந்தள   மன்னன்   திவ்ய   பார்வைபெற்று
                  மணிகண்டன்   கூறிய   மலையை   அறிந்தார்
                  மணிகண்டன்   தானும்   சரத்தை   எடுத்து
                  மலையை   நோக்கி    எய்தாராம்

 85             மணிகண்டன்   செலுத்திய   சரமும்   தான்
                  ஒரு   ஆலின்   உடம்பில்   தைத்ததுவாம்
                  அன்த   நாள்  முதல்   அம்   மரத்தினையே
                  சரங்குத்திஆல்   என   அறியவந்ததாம்

 86             கன்னிமார்களும்   அந்த   ஆலமரத்திலயே
                  சரங்களை   குத்தி   வந்தார்கள்
                  இந்த   நாளிலும்    மஞ்சமாதா  -  அந்த
                  சரங்களை   பார்த்து   திரும்புவாராம்

 87             அன்புடன்   வளர்த்த   தாய்   தந்தையரை
                  மணிகண்டன்   விட்டு   அகன்று   விட்டார்
                  அவரும்   அந்த   மரத்தின்   கீழே
                  கற்ச்   சிலையாக   அமர்ந்துவிட்டார்
  
 88             அய்யனும்   அப்பனும்   இணைந்து   பெற்ற
                  அய்யப்ப   தேவன்   அமர்ந்து விட்டார்
                  சின்முத்திரை   தாங்கி   யோகிரூபத்தில்
                  அவனியெங்கும்   அரசனானார்

 89             பரசுராமரும்   சிலையை   தாங்கி
                  இப்பொதுள்ள   ஆலையத்தில்   ப்ரதிஷ்டை   செய்தார்
                  அங்குள்ள   மலையில்   ஒரே   கல்லில்
                   பதினெட்டு   படிகளும்   செதுக்கச்   சொன்னார்

 90              உன்னுள்   நானும்   இருக்கிறேன்   என்ற 
                   மந்திரம்  தத்வமஸி   என்ற   மந்திரம்   தான்
                   கலி   காலத்தில்   வாழ்ந்துவந்த
                   ஒரே   ஒரு   தைவமும்   ஐயப்பன்   தான்
                              ப்ரத்யக்‌ஷ   தைவமும்   அவரேதான்

சரணம்   சரணம்   ஐயப்பா                      -                       சரணாகதனே   ஐயப்பா
சன்மார்கதாயகனே   ஐயப்பா                -                       ஶ்ரீதர்மசாஸ்தா    ஐயப்பா 


சரணம்   சரணம்   ஐயப்பா                      -                       சரணாகதனே ஐயப்பா
சன்மார்கதாயகனே   ஐயப்பா                -                       ஶ்ரீதர்மசாஸ்தா    ஐயப்பா 


ஸ்வாமியே  சரனம்  அய்யப்பா !


 91      இந்தக்   கதையை   செவியுற்ற   பக்தர்கள்
ஐயப்பனின்   சக்தியை   எண்ணி   சிந்திப்பீரே
அவர்   அருமை   பெருமை   எல்லாம்   எண்ணி
அவர்   நாமம்   நீங்களும்  சொல்வீரே

 92       குளத்துப்புழையில்   சிறு   பாலனாகி
அச்சங்கோவிலில்   பெரும்   அரசனாகி
ஆரியங்காவினில்   அய்யனாகி
சபரீமலையில்   யோகியானார்

]
              

  93      அகந்தையை   முற்றும்   அழிப்பவனே
அச்சம்   எல்லாம்   தவிர்ப்பவனே
அம்பலத்தில் ஆளும்   அரசனே
அன்னதானப்   பிரபுவே   அய்யப்பா

  94      கார்த்திகை    மாதம்   மாலையிட்டேன்
காலையும்   மலையும்   பூஜைசெய்தேன்
சபரீமலையில்   நடக்கையிலே - அது
காந்தம்   போல   இழுக்குதையா

  95      ஐயனை   மனதில்   நினைக்கயிலே
ஐயம்   எல்லாம்  அகலுதையா
மகரஜ்    ஜோதியை    காண்கையிலே
மரணத்தின்    பயமும்    தீருமய்யா

  96      பதினெட்டுபடிகள்    தாண்டயிலே
பக்தியும்    எல்லையை    தாண்டுதய்யா
பந்தளக்    குழந்தையை    காண்கையிலே
பாபங்கள்    எல்லாம்    மறையுதய்யா

  97      மோஹினே   தனையா               ஐயப்பா         ஐயப்பா
மோஹன   ரூபா                           ஐயப்பா         ஐயப்பா
மஹிஷீ    மர்த்தன                       ஐயப்பா         ஐயப்பா
மதகஜ   வாஹனா                                   ஐயப்பா         ஐயப்பா

  98      ஐங்கரன்   சோதரா                        ஐயப்பா         ஐயப்பா
ஆறுமுகன்  தம்பியே                  ஐயப்பா         ஐயப்பா
அநாத   ரக்ஷகா                             ஐயப்பா          ஐயப்பா
ஆபத்  பாந்தவா                              ஐயப்பா         ஐயப்பா

  99      கலியுக  வரதா                               ஐயப்பா         ஐயப்பா
கானன  வாஸா                             ஐயப்பா         ஐயப்பா
கற்ப்பூர  ப்ருபுவே                         ஐயப்பா          ஐயப்பா
காந்தமலை   வாஸா                   ஐயப்பா          ஐயப்பா
  
 100     பம்பாவாஸா                                  ஐயப்பா         ஐயப்பா
பந்தள   வேந்தே                            ஐயப்பா         ஐயப்பா
பாவன   ரூபா                                 ஐயப்பா         ஐயப்பா
பரம    தயாளா                                ஐயப்பா         ஐயப்பா

101      வில்லளி   வீரா                              ஐயப்பா         ஐயப்பா
வீரமணிகண்டா                             ஐயப்பா         ஐயப்பா       
விஜயகுமாரா                                 ஐயப்பா         ஐயப்பா
விக்னங்கள்   தீர்ப்பாய்                ஐயப்பா         ஐயப்பா
102      ஔதார்டய    சீலா                        ஐயப்பா         ஐயப்பா
ஓங்காரப்   பொருளே                   ஐயப்பா         ஐயப்பா       
ஓம்   குருநாதா                              ஐயப்பா         ஐயப்பா
ஓமல்க்   குமாரா                           ஐயப்பா         ஐயப்பா                   

103      ஹரியின்   மகனே                                    ஐயப்பா        ஐயப்பா
ஹரனின்   புதல்வா                      ஐயப்பா        ஐயப்பா
ஹரிஹர   ஸுதனே                     ஐயப்பா        ஐயப்பா
ஹரிஹராத்மஜா                          ஐயப்பா        ஐயப்பா

104      பூலோக   நாதா                               ஐயப்பா        ஐயப்பா
பூமி   ப்ரபஞ்சா                                ஐயப்பா        ஐயப்பா
பூஸுர   ரக்ஷகா                            ஐயப்பா        ஐயப்பா
பூமிக்கதிபதி                                    ஐயப்பா        ஐயப்பா

105      நீல  வஸ்த்ரதாரீ                           ஐயப்பா        ஐயப்பா
நித்யப்   பிரமச்சாரீ                       ஐயப்பா         ஐயப்பா
நீலிமலை  ஈசா                              ஐயப்பா        ஐயப்பா
நித்யானந்தா  ரூபா                       ஐயப்பா        ஐயப்பா

106      சந்தன  வாசா                                 ஐயப்பா        ஐயப்பா
சம்பு   குமாரா                                 ஐயப்பா         ஐயப்பா
சபரீ அன்னையே                           ஐயப்பா         ஐயப்பா
சபரிமலைவாசா                           ஐயப்பா         ஐயப்பா


107      மணிகண்ட தேவா          ஐயப்பா         ஐயப்பா
மோஹன ரூபா                ஐயப்பா         ஐயப்பா
மந்தஹாஸ  வதனா     ஐயப்பா         ஐயப்பா
மங்கள  ரூபனே              ஐயப்பா         ஐயப்பா

108      சபரி  பீடமே                      ஐயப்பா         ஐயப்பா
சரங்குத்தி  ஆலே                       ஐயப்பா         ஐயப்பா
சபரி  கிரீசா                       ஐயப்பா         ஐயப்பா
ஶ்ரீதர்ம சாஸ்தா              ஐயப்பா         ஐயப்பா


                         ஐயப்பா         ஐயப்பா                                ஐயப்பா         ஐயப்பா

                                     ஐயப்பா         ஐயப்பா                                 ஐயப்பா         ஐயப்பா


ஓம் ஸ்வாமியே    சரணம்   ஐயப்பா!                                                                      ஓம் ஸமஸ்தாபராத ரக்‌ஷ்கனே   சரணம் ஐய்யப்ப     






                                                                                                    










     மங்களம்







No comments:

Post a Comment